search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

    விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பக்கமுள்ள குறிஞ்சிபாளையம் பக்கமுள்ள ஆசானம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காண்டிபன் (வயது 29). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று ஓசூர் பகுதிக்கு வேலைக்கு வந்திருந்த அவர், மோட்டார்சைக்கிளில் அத்திமுகம் நரசிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து காண்டிபன் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×