என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு
Byமாலை மலர்27 Oct 2020 2:40 AM GMT (Updated: 27 Oct 2020 2:40 AM GMT)
புழல் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (வயது 40). இவர், புழல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கலியமூர்த்தி, போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், போலீஸ் ஏட்டு கலியமூர்த்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தாரா?, இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன போலீஸ் ஏட்டு கலியமூர்த்திக்கு ஷீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். போலீஸ் நிலையத்தில் பணியின்போது ஏட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (வயது 40). இவர், புழல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கலியமூர்த்தி, போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், போலீஸ் ஏட்டு கலியமூர்த்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தாரா?, இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன போலீஸ் ஏட்டு கலியமூர்த்திக்கு ஷீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். போலீஸ் நிலையத்தில் பணியின்போது ஏட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X