என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 44 பேர் கைது
Byமாலை மலர்25 Oct 2020 7:26 AM GMT (Updated: 25 Oct 2020 7:26 AM GMT)
ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ஈரோடு:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பெண்களுக்கு எதிரான மனுதர்ம சனாதன நூலை தடை செய்ய வேண்டும், பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சித்ரா, தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி, நிர்வாகிகள் அரங்க முதல்வன், சண்முகம், மதிவாணன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், செயலாளர் சலீம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பெண்களுக்கு எதிரான மனுதர்ம சனாதன நூலை தடை செய்ய வேண்டும், பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சித்ரா, தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி, நிர்வாகிகள் அரங்க முதல்வன், சண்முகம், மதிவாணன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், செயலாளர் சலீம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X