என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் விவரம் சேகரிப்பு
Byமாலை மலர்24 Oct 2020 5:49 PM GMT (Updated: 24 Oct 2020 5:49 PM GMT)
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
கொரோனா வைரசால் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அவ்வாறு தடுப்புமருந்து கண்டுபிடித்தால் அதை முதலில் முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், லேப் டெக்னீசியன், மருந்தக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோரின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சுகாதார துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்ட சுகாதார துறையினர், மேற்கூறியவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில், அவர்களின் வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் கார்டு இதுபோன்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
கொரோனா வைரசால் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அவ்வாறு தடுப்புமருந்து கண்டுபிடித்தால் அதை முதலில் முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், லேப் டெக்னீசியன், மருந்தக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோரின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சுகாதார துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்ட சுகாதார துறையினர், மேற்கூறியவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில், அவர்களின் வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் கார்டு இதுபோன்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X