search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

    நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (வயது 35). அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் திருமலப்பா (60), ரத்தினப்பா (54). விவசாயிகளான இவர்களுக்கு அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரேமாவை அவர்கள் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலப்பா, ரத்தினப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×