search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி

    காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி தனியார் நிறுவன காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் ஜூஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கோனார்கொட்டாய் என்ற இடத்தில் சாலையோரம் நடந்து சென்றார். 

    அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×