என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்20 Oct 2020 10:10 AM GMT (Updated: 20 Oct 2020 10:10 AM GMT)
அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி செல்வி (வயது 27). இவர் கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தூக்கத்தில் எழுந்து எங்கேயாவது சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு செல்வி சென்றார். இந்தநிலையில் அவர் அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பலியானார். தலை, கை, கால்கள் துண்டு துண்டாகி அவரது உடல் சிதறி கிடந்தது.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி செல்வி (வயது 27). இவர் கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தூக்கத்தில் எழுந்து எங்கேயாவது சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு செல்வி சென்றார். இந்தநிலையில் அவர் அச்சரப்பாக்கம் அருகே ரெயில் மோதி பலியானார். தலை, கை, கால்கள் துண்டு துண்டாகி அவரது உடல் சிதறி கிடந்தது.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X