search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வி.கைகாட்டி அருகே லாரி மோதி விவசாயி பலி

    வி.கைகாட்டி அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). விவசாயி. இவரது உறவினர் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்த தேவா(40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் பிரிவு சாலையில் ஏறியபோது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாரிமுத்துவை(40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×