என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணி பாதுகாப்பு கோரி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 Oct 2020 11:20 AM GMT (Updated: 19 Oct 2020 11:20 AM GMT)
பணி பாதுகாப்பு கோரி ஊராட்சி செயலர்கள் சிவகங்கை கலெக்டர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்ப பெறக்கோரியும், ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவருக்கு பதிலாக அவரது குடும்ப ஆண்கள் தலையிடுவதை கண்டித்தும், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுரவ தலைவர் செல்லபாண்டியன், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மாவட்ட செயலாளர் ராமநாதன், பொருளாளர் மாரிமுத்து, மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளா மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X