search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கந்தர்வகோட்டை அருகே தீக்குளித்த பெண் பலி

    கந்தர்வகோட்டை அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஜெயலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வரும் என்று கூறப்படுகிறது. 

    இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இருந்தாலும் நோய் குணமாகவில்லையாம். சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×