search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ராஜா கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா கலந்து கொண்டு பேசினார். இதில், மாநில துணை செயலாளர் சாக்ரடீஸ், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்பப்பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக, கணவர், உறவினர்கள் தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    Next Story
    ×