என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்17 Oct 2020 9:16 AM GMT (Updated: 17 Oct 2020 9:16 AM GMT)
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ராஜா கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா கலந்து கொண்டு பேசினார். இதில், மாநில துணை செயலாளர் சாக்ரடீஸ், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்பப்பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக, கணவர், உறவினர்கள் தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X