search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

    சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள தோரிப்பள்ளியை சேர்ந்தவர் லிங்கப்பா (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் காமன்தொட்டி- பேரிகை சாலையில் ரவுதப்பள்ளி ஏரிக்கரை பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தநேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் லிங்கப்பா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லிங்கப்பா இறந்து விட்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×