search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பரங்கிப்பேட்டையில் திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை

    பரங்கிப்பேட்டையில் திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பு.மணவெளியை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் சசித்ராவுக்கும்(வயது 30) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சசித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சசித்ராவின் தந்தை குப்புசாமி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சசித்ராவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், வரதட்சணை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×