என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்14 Oct 2020 7:57 AM GMT (Updated: 14 Oct 2020 7:57 AM GMT)
மீன்சுருட்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 48). கூலி தொழிலாளியான இவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகள் லதாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் லதா, அவருடன் வாழாமல் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த சண்முகத்தின் மகள் சாந்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உத்திராபதி தனது மாமானார் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும், இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி கோபித்துக்கொண்டு வெளியூர் சென்றதாகவும் தெரிகிறது. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற உத்திராபதி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து உத்திராபதியின் அண்ணன் கணேசன்(53) கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து, உத்திராபதியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X