என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தேயிலை தொழிற்சாலைகள் பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தி வைத்திருப்பதை கைவிட்டு மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலை உயர்ந்து கிலோவிற்கு ரூ.28 முதல் ரூ.30 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. தற்போது நிலவிவரும் சீதோஷண நிலை காரணமாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உரமிட்டு உள்ளதால் பசுந்தேயிலை மகசூலும் கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தேயிலை வாரியத்தின் வரைமுறைப்படி பசுந்தேயிலை கொள்முதல் செய்ய இயலாது என ஒரு சில தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்வதை கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே தேயிலை தொழிற்சாலைகள் பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தி வைத்திருப்பதை கைவிட்டு மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோத்தகிரி அருகே கன்னேரிமுக்குவில் நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பெள்ளி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கக்கி சண்முகம் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகள், விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தியுள்ள நிலையில், இது சம்மந்தமாக தேயிலை வாரியம் உடனடியாக தலையிட்டு, தொடர்ந்து தேயிலை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி மாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×