என் மலர்
செய்திகள்

மிரட்டல்
வேளாங்கண்ணி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வேளாங்கண்ணி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கிராமத்துமேடு ஈ.வெ.ரா. நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது30). இவர் பரவையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், வடக்கு பொய்கை நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மகாகுமார் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது குறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மகாகுமார், முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்று, நீ கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அவ்வாறு வாபஸ் பெறவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story