search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் பொதுமக்களிடம் புகார் மனு பெற்று விசாரணை நடத்திய காட்சி.
    X
    போலீசார் பொதுமக்களிடம் புகார் மனு பெற்று விசாரணை நடத்திய காட்சி.

    காரைக்குடியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் கொடுத்த புகார்கள் குறித்து நேரடி விசாரணை

    காரைக்குடியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் கொடுத்த புகார்கள் குறித்து நேரடி விசாரணை செய்யப்பட்டது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மாவட்ட போலீசாருக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் குறித்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், மாவட்டம் முழுவதும் ஒரே இடத்தில் வைத்து பொதுமக்களை வரவழைத்து நீண்ட நாள் பிரச்சினைகள், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்து இதுநாள் வரை தீர்வாகாமல் இருக்கும் பொதுமக்களை ஒரே இடத்தில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக புகார் மனுக்கள் மேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று காரைக்குடி 100அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் புகார் மனுக்கள் குறித்து பொதுமக்களை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அதிகஅளவில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை, குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்தல், வரதட்சணை பிரச்சினை, சொத்து பிரச்சினை, வில்லங்க பிரச்சினை, முன்விரோத போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி சமரச தீர்வு காணப்பட்டது.

    மேலும் காரைக்குடி பகுதியில் புகார் கொடுத்த பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வை ஏற்படுத்தினர். போலீசாரின் இந்த நேரடி சந்திப்பு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    Next Story
    ×