search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    வீரபாண்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    உப்புக்கோட்டை:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூமலைக்குண்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 34). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு பூவிகா(6), ரித்திகா (4) என 2 மகள்கள் உள்ளனர். நேற்று ராஜ்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் தகராறு முற்றியதில் மனம் உடைந்த ராஜ்குமார் மனைவியையும், மூத்த மகளையும் வீட்டுக்கு வெளியே தள்ளி கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

    பின்னர் அவர் தனது இளைய மகள் ரித்திகாவுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

    இதையடுத்து ஜெயப்பிரியா கதவை திறக்குமாறு கூச்சல் போட்டார். எனினும் கதவு திறக்கப்பட வில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் ராஜ்குமாரும், ரித்திகாவும் மயங்கி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ரித்திகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×