என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வாய்மேடு அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை
வாய்மேடு அருகே ஸ்கூட்டர் வாங்கி கொடுக்காததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பெருமைக்கோன்காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சபிதா (வயது15). இவர் ஆயக்காரன்புலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது அப்பாவிடம் அடகு வைத்திருந்த தனது நகையை திருப்பி தரவேண்டும் என்றும், தான் பள்ளிக்கு செல்வதற்கு ஸ்கூட்டர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அடகு வைத்த நகையை அடுத்த மாதம் திருப்பி தருகிறேன், ஸ்கூட்டர் பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதனால் மனமுடைந்த சபீதா விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சபிதா இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






