என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

    சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் வெங்கடகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு ஒதுக்கீட்டின் படி நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    அதன்படி பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினருக்கு, மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியர், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் பழுதுபார்த்தல், பற்ற வைப்பவர், ஆடை தயாரித்தல், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடல் உதவியாளர் ஆகிய பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் வருகிற அக்டோபர் 16 மற்றும் 17-ந் தேதி நிரப்பப்படஉள்ளது.

    இந்த பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை சிவகங்கை மற்றும் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இலவசமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து தரப்படும். எனவே மேற்கண்ட தொழில் பிரிவுகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×