என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை
திருமருகல் ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, டாக்டர் மணிவேல் ஆகியோர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகாமசுந்தரி திருநீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






