என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மனைவியுடன் தகராறு: அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை

    கோத்தகிரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காம்பாய்க்கடை பகுதியை சேர்ந்தவர் தசரதன்(வயது 38). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சசிகலா(30). இவர்களுக்கு 12 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தசரதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தசரதன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் கோபத்தில் படுக்கை அறைக்கு சென்று, உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். இரவு 10 மணி ஆகியும் அறைவிட்டு அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த சசிகலா, அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவை அவர் திறக்கவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது தசரதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா கதறி அழுதார். பின்னர் கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×