search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

    வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஆயில் நிறுவனம் அருகே ஆற்றில் இருந்து 3 பேர் மினி லாரியில் மணல் திருடிக்கொண்டிருந்தனர்.

    இதை பார்த்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்திரவாகிணிபேட்டை சேர்ந்த சிவா, பாஸ்கர், ஜனா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×