என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 Oct 2020 12:32 PM GMT
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். இதில் தொ.மு.ச. மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பரமசிவம், மத்திய சங்க துணைத்தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்கள்.
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராமநாதன், தவமணி, செல்வராஜ், ரவி, குணசேகரன், கமலேசன், முரளி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும். போக்குவரத்து கழக நிர்வாகமே அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசு ஈடுகட்ட வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.25லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X