search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கடலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்- தி.மு.க. எம்.பி. உள்பட 250 பேர் மீது வழக்கு

    கடலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருமாவளவன், தி.மு.க. எம்.பி. உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கடலூரில் நடந்த தி.மு.க.கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். இதில் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தடையை மீறி ஆர்ப்பாட்டடம் செய்ததாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. , ரமேஷ் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×