என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.10 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி - சாந்தி ராமு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்25 Sep 2020 12:26 PM GMT (Updated: 25 Sep 2020 12:26 PM GMT)
கோத்தகிரி அருகே ரூ.10 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணியை சாந்தி ராமு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கோத்தகிரி:
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகா தேவி காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் நடைபாதை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி ராமு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், மேற்பார்வையாளர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X