என் மலர்
செய்திகள்

விபத்து
சைக்கிள் மீது கார் மோதல்- ஆவின் நிறுவன காவலாளி பலி
கிருஷ்ணகிரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆவின் நிறுவன காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). இவர் கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து கொண்டு மேல்சோமார்பேட்டை கூட்ரோடு அருகே சைக்கிளில் அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முனியப்பன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






