என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பசுமை வீடுகள் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    புவனகிரி அருகே பசுமை வீடுகள் திட்டத்தில் முறைகேடு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புவனகிரி:

    மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி, மருதூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2015-2016-ம் நிதியாண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் அம்பாள்புரம் ஊராட்சியில் பசுமை வீடு ஒதுக்கப்படாத ஒரு நபருக்கு 5 காசோலைகள் மூலம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 150 வழங்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுக்கு காரணமான அப்போதைய அம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சோபனா, துணை தலைவராக இருந்த கணேசன், ஊராட்சி செயலாளராக இருந்த ஜெகன்நாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா, முன்னாள் துணை தலைவர் கணேசன் உள்ளிட்ட 3 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×