என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
    X
    சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

    சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

    ஜெயங்கொண்டம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் இருந்து பெரியவளையம் செல்லும் வழியில் பாப்பாங்குளம் செல்லும் பிரிவு ரோடு அருகில் (வாட்டர் டேங்க் அருகில்) ரோட்டில் 2 இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. கடந்த 1 ஆண்டுகளாக இது சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் அதில் விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற வருகிறது.

    மேலும் இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் செல்லும் போது தடுமாறி பள்ளத்தில் விழுகின்றன. எனவே விபத்து ஏற்படாத வண்ணம் பள்ளங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×