search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராயக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

    ராயக்கோட்டை அருகே தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டையை அடுத்த பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அம்சவேணி(வயது 17). இவர் ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய தாயார் தோட்டத்திற்கு வருமாறு அம்சவேணியை அழைத்துள்ளார். ஆனால் அம்சவேணி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மகளை கண்டித்து விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்தபோது அம்சவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

    மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×