என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி வனத்தோட்ட மேலாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்19 Sep 2020 10:36 AM GMT (Updated: 19 Sep 2020 10:36 AM GMT)
அறந்தாங்கி வனத்தோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.50 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்த நபர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை முடிந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சோதனையின் போது, அறந்தாங்கி வனத்தோட்டக் கண்காணிப்பாளர் வள்ளிகண்னுவிடம் இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு 04322-22355 செல்: 94981 57799 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்த நபர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை முடிந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சோதனையின் போது, அறந்தாங்கி வனத்தோட்டக் கண்காணிப்பாளர் வள்ளிகண்னுவிடம் இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு 04322-22355 செல்: 94981 57799 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X