search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை

    காரைக்குடி அருகே மாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு போலீஸ் சரகம் நெற்புகப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 35). இவரது மனைவி கவிதா. இவர் முதுநிலை பட்டதாரி. அய்யப்பன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் சரிவர வேலைக்கு செல்வதில்லை.

    இவர்களுக்கு 3½ மற்றும் 5½ வயதில் 2 மகள்கள் உண்டு. சில தினங்களுக்கு முன்பு கவிதாவின் தாயார் ரெங்கம்மாள் திடீரென மரணம் அடைந்தார்.

    இதனால் அய்யப்பன் தனது மனைவிக்கு ஆதரவாக இருந்த அவரது தாயார் இறந்துவிட்டாரே என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

    மாமியார் இறந்து விட்டார் என்ற துக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×