search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    காவேரிப்பாக்கம் அருகே சிமெண்டு தூண் விழுந்து பெண் பலி

    காவேரிப்பாக்கம் அருகே சிமெண்டு தூண் விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே பெரிய கிராமம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கஸ்தூரி (58). இவர் நேற்று வீட்டின் பின்புறம் சமைப்பதற்காக காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்தார்.

    சில தினங்களாக மழை பெய்ததால் வீட்டின் பின்புறம் இருந்த சிமெண்ட்டால் ஆன தூண் திடீரென கஸ்தூரியின் தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×