search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகையில், ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 200 கடைகள் அடைப்பு

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 200 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
    நாகப்பட்டினம்:

    நாகை அவுரி திடலில் அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும்.

    மலை வாழ் பிரதேசங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சமவெளி பிரதேசங்களில் உள்ளது போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் சாலை விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 200 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.
    Next Story
    ×