search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அரியலூர் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

    அரியலூர் அருகே குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஜெயங்கொண்டம்:

    திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராமசுப்ரமணியன். இவர் செங்குறிச்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகுணா (வயது 42).

    இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு தன்வந்த் (வயது 6), வத்யவன் (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சிவராமசுப்ரமணியனுடன் வசித்து வருகின்றனர். சுகுணா மட்டும் ஆண்டி மடத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, பள்ளிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் பணி சுமை மற்றும் குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டி மடத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் சுகுணா தூக்குப்போட்டு தொங்கினார்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், சுகுணாவை மீட்டு சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகுணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிவராமசுப்ர மணியன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×