என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்குவரத்து விதிகள் மீறல் - 300 பேர் மீது வழக்குப்பதிவு - 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Byமாலை மலர்12 Sep 2020 11:28 AM GMT (Updated: 12 Sep 2020 11:28 AM GMT)
உளுந்தூர்பேட்டை அருகே போக்குவரத்து விதிகளை மீறியதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் மற்றும் திருக்கோவிலூர் சாலை, ஆசனூர் சாலை, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்பட 7 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், மது குடித்துவிட்டும் வாகனம் ஓட்டி வந்தது என்று போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆவணங்கள் இல்லாமல் வந்த 50 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வாகனங்களின் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது மோட்டார் சைக்கிள்களை மீட்டுச் சென்றனர். இந்த வாகன தணிக்கையின் போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம் மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X