என் மலர்

    செய்திகள்

    தீ (கோப்புப்படம்)
    X
    தீ (கோப்புப்படம்)

    பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளை சாலையில் வீசி செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் வீசிய குழந்தைகளை மீட்டு காப்பகங்களிலும் ஒப்படைக்கப்படுகின்றன.

    இந்நிலையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த குழந்தையின் உடலை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×