என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திட்டக்குடி அருகே பெண், விஷம் குடித்து தற்கொலை

    திட்டக்குடி அருகே கொரோனா பாதித்த கணவரை விட்டு தனியாக வசித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வ.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி கற்பகம் (வயது 28) கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெரியார் நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். சம்பவத்தன்று உடல் நலக்குறைபாடு காரணமாக மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×