என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
கிருஷ்ணகிரி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கிருஷ்ணகிரி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் கூறுகையில் பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவது புகார்கள் அதிக அளவு வந்தன. இதனால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் கூறுகையில் பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவது புகார்கள் அதிக அளவு வந்தன. இதனால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
Next Story