என் மலர்

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    கோழிக்கறி சாப்பிட்டு தூங்கிய கூலி தொழிலாளி மர்ம மரணம்- போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுச்சேரியில் கோழிக்கறி சாப்பிட்டு தூங்கிய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை அருந்ததி நகர் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 45). கூலி தொழிலாளி. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (44) இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு சக்திவேல் படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது.

    காலையில் சரியாகிவிடும் என நினைத்து சக்திவேல் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை ஜெயலட்சுமி அவரை எழுப்பியபோது சக்திவேல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து ஜெயலட்சுமி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சக்திவேலு கோழிக்கறி சாப்பிட்டதில் உணவு வி‌ஷத்தன்மை மாறி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×