என் மலர்
செய்திகள்

தாக்குதல்
சீர்காழி அருகே கணவரின் சொத்தை கேட்டு மாமனார்-மாமியார் மீது பெண் தாக்குதல்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கணவரின் சொத்தை கேட்டு மாமனார் மற்றும் மாமியார் மீது பெண் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ராசையாள் (55). இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதனையடுத்து தனது சொத்தை 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.
வெளிநாட்டில் உள்ள மகன் பாலமுருகனின் சொத்தை மட்டும் பிரித்து கொடுக்காமல் தனது பொறுப்பில் வைத்துள்ளார்.
இதனால் பாலமுருகனின் மனைவி கீதா (32), நேற்று தனது தந்தை ஜெயராமன் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று மாமனார் சவுந்தரராஜனிடம், தனது கணவரின் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கீதா மற்றும் அவரது உறவினர்கள் சவுந்தரராஜனையும், அவருடைய மனைவி ராசையாளையும் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ராசையாள் (55). இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதனையடுத்து தனது சொத்தை 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.
வெளிநாட்டில் உள்ள மகன் பாலமுருகனின் சொத்தை மட்டும் பிரித்து கொடுக்காமல் தனது பொறுப்பில் வைத்துள்ளார்.
இதனால் பாலமுருகனின் மனைவி கீதா (32), நேற்று தனது தந்தை ஜெயராமன் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று மாமனார் சவுந்தரராஜனிடம், தனது கணவரின் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கீதா மற்றும் அவரது உறவினர்கள் சவுந்தரராஜனையும், அவருடைய மனைவி ராசையாளையும் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






