search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    ஊட்டியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கொடிக்கம்பம் அகற்றம்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    கொடிக்கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.க. சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய இளைஞரணி துணைத் தலைவர் கலந்து கொண்டார். கட்சி கொடி ஏற்றுவதற்காக அப்பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது. இதற்கிடையே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று மாலை அனுமதி பெறாமல் நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றினர். இதனை தொடர்ந்து கொடிக்கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊட்டி நகர தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    இது குறித்து ஊட்டி நகர தலைவர் பிரவீன் கூறும்போது, நாளை கொடிக்கம்பம் நடப்படாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை கழகம் முடிவு செய்து உள்ளது என்றார்.
    Next Story
    ×