என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வசந்தகுமார் எம்.பி. மறைவு- நாராயணசாமி இரங்கல்
Byமாலை மலர்29 Aug 2020 6:32 AM GMT (Updated: 29 Aug 2020 6:32 AM GMT)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் நெருங்கி பழகியவர். எப்போதும் சுறுசுறுப்பானவர். தனது உழைப்பால் உயர்ந்தவர். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர்.
தமிழகத்தில் சிறந்த வர்த்தகராக இருந்தவர். அரசியலில் வர்த்தகத்தை ஒருபோதும் அவர் கலந்ததில்லை. தனது உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுவாக வளர்த்தவர். அவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் நெருங்கி பழகியவர். எப்போதும் சுறுசுறுப்பானவர். தனது உழைப்பால் உயர்ந்தவர். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர்.
தமிழகத்தில் சிறந்த வர்த்தகராக இருந்தவர். அரசியலில் வர்த்தகத்தை ஒருபோதும் அவர் கலந்ததில்லை. தனது உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுவாக வளர்த்தவர். அவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X