என் மலர்
செய்திகள்

தற்கொலை
குடியாத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தற்கொலை
குடியாத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. தனியார் மருத்துவமனையில் காவலாளியாக உள்ளார். இவரது மகன் ஜெயமோகன் (வயது 23) மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டு அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்போது அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயமோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சிங்காரம் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






