என் மலர்
செய்திகள்

கவர்னர் கிரண்பேடி
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது- கிரண்பேடி குற்றச்சாட்டு
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கொரோனாவால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியது. 1 லட்சம் மக்கள் தொகையை எடுத்து பார்த்தோம் என்றால் அதில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக புதுவை உள்ளது.
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது. இது யாரையும் குறை கூறுவது அல்ல. ஆனால் நாம் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தால் தான் இந்த சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கூட குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அதனை புதுவையில் கடைபிடிக்க முடிவதில்லை. இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டு பதில் தேட வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






