என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரு முதியவர் பலியானார்.
ஈரோடு:
கொரோனாவின் பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,726 ஆக உயர்ந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வி.ஐ.பி. நகர், சாஸ்திரிநகர், கொல்லம்பாளையம், காந்திபுரம், பார்க்ரோடு, மரப்பாலம், சூரம்பட்டி நால்ரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு, மொசுவண்ணன்வீதி, கனிராவுத்தர் குளம், ராஜாஜிபுரம், பி.பி.அக்ரஹாரம், வெட்டுக்காட்டுவலசு, ஆர்.என்.புதூர், கங்காபுரம், முனிசிபல்காலனி, நாடார்மேடு, கருங்கல்பாளையம், பெரியசேமூர், சடையம்பாளையம், ராம்நகர், காந்திநகர், கிருஷ்ணம்பாளையம், டெலிபோன்நகர், சூளை நெசவாளர்காலனி, ஞானபுரம், ஜீவாநகர், ரங்காவீதி, வீரப்பன்சத்திரம், குமலன்குட்டை, அன்னைநகர், உசேன்சாய்பு வீதி, எஸ்.எஸ்.லேஅவுட் பகுதி, தீயணைப்பு நிலைய பகுதி, மாணிக்கம்பாளையம், காசிபாளையம், மூலப்பாளையம், மண்டபம் வீதி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் அந்தியூர் அருகே அத்தாணி, குப்பாண்டம்பாளையம், தொப்புக்காட்டூர், பெருந்துறை, நசியனூர் அருகே வேப்பம்பாளையம், வெள்ளோடு, கொடுமுடி வடக்கு வீதி, தாலுகா அலுவலகம், பவானி மேட்டூர் மெயின்ரோடு, வர்ணாபுரம், தேவராஜ் பிள்ளைசந்து, சித்தோடு பேட்டைகாடு, தாளவாடி தலமலைரோடு ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 946 பேர் குணமடைந்து உள்ளனர். 752 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்திலேயே ஈரோடு மாநகராட்சியில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். 70 வயதான அவர் தலைவலி, மூச்சு திணறல் பிரச்சினையால் கடந்த 15-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
கொரோனாவின் பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,726 ஆக உயர்ந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வி.ஐ.பி. நகர், சாஸ்திரிநகர், கொல்லம்பாளையம், காந்திபுரம், பார்க்ரோடு, மரப்பாலம், சூரம்பட்டி நால்ரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு, மொசுவண்ணன்வீதி, கனிராவுத்தர் குளம், ராஜாஜிபுரம், பி.பி.அக்ரஹாரம், வெட்டுக்காட்டுவலசு, ஆர்.என்.புதூர், கங்காபுரம், முனிசிபல்காலனி, நாடார்மேடு, கருங்கல்பாளையம், பெரியசேமூர், சடையம்பாளையம், ராம்நகர், காந்திநகர், கிருஷ்ணம்பாளையம், டெலிபோன்நகர், சூளை நெசவாளர்காலனி, ஞானபுரம், ஜீவாநகர், ரங்காவீதி, வீரப்பன்சத்திரம், குமலன்குட்டை, அன்னைநகர், உசேன்சாய்பு வீதி, எஸ்.எஸ்.லேஅவுட் பகுதி, தீயணைப்பு நிலைய பகுதி, மாணிக்கம்பாளையம், காசிபாளையம், மூலப்பாளையம், மண்டபம் வீதி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் அந்தியூர் அருகே அத்தாணி, குப்பாண்டம்பாளையம், தொப்புக்காட்டூர், பெருந்துறை, நசியனூர் அருகே வேப்பம்பாளையம், வெள்ளோடு, கொடுமுடி வடக்கு வீதி, தாலுகா அலுவலகம், பவானி மேட்டூர் மெயின்ரோடு, வர்ணாபுரம், தேவராஜ் பிள்ளைசந்து, சித்தோடு பேட்டைகாடு, தாளவாடி தலமலைரோடு ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 946 பேர் குணமடைந்து உள்ளனர். 752 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்திலேயே ஈரோடு மாநகராட்சியில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். 70 வயதான அவர் தலைவலி, மூச்சு திணறல் பிரச்சினையால் கடந்த 15-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
Next Story






