search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இ-பாஸ்
    X
    இ-பாஸ்

    வெளி மாவட்ட வாகனங்கள் கண்காணிப்பு - இ-பாஸ் அனுமதி பெறாமல் வந்தால் எச்சரிக்கை

    இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்துக்கு வரும் வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் அனுமதி பெற்று உள்ளதா என்று சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சிலர் இ-பாஸ் இல்லாமல் சோதனை சாவடிகளை கடந்து வருகிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் இதுபோன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகிறார்கள்.

    நேற்று கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனைச்சாவடியில் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தே ஈரோடு நகருக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
    Next Story
    ×