search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லங்குடி மதுக்கடை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    கொல்லங்குடி மதுக்கடை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொரோனா தொற்றால் இறந்த மதுக்கடை பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள மதுக்கடை முன்பு மதுக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்களை சேர்ந்த கருப்பசாமி தலைமை தாங்கினார். தாளைமுத்து, கண்ணன், மலைராஜ், முருகேசன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 25-ந் தேதி பகல் 12 மணி வரை கடைகளை அடைத்துவிட்டு வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல் மானாமதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா பொறுப்பாளர் பூமிநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கமலகண்ணன், ஏ.ஐ.டி.சி மாவட்ட செயலாளர் தாளமுத்து, விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் சிவசண்முகம், விடுதலை முன்னணி பொறுப்பாளர் முத்துச்சாமி, விற்பனை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×