என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,582 ஆக உயர்ந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் சென்னை, மதுரை என்று உக்கிரம் காட்டிய கொரோனா தாக்கம் தற்போது ஈரோடு மாவட்டத்தை முற்றுகையிட தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில் மற்ற மாவட்டங்களை விட மிகவும் குறைவான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. ஆனால், சமீபகாலமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி 100 பேருக்கும் மேலாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,445 ஆக இருந்தது. 24 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை 895 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். 526 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,582 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். கடந்த 15-ந்தேதி இறந்த 87 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் 653 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழு நேர கொரோனா வைரஸ் சிறப்பு ஆஸ்பத்திரியாக உள்ளது. அங்கு 500 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக போடப்பட்டு இருந்தது.
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்து விட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கும் சுமார் 200 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. எனவே இன்னும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் போது சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தயார் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும்போது பெருந்துறையில் உள்ள திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதலாக 1000 படுக்கைகள் வரை தயார்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தாக்கம் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. காய்ச்சல் பாதிப்பு இருந்தாலே அது கொரோனாவின் அறிகுறிதான்.
எனவே அசட்டை செய்யாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி பிரச்சினை இருந்தால் உடனடியாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க முடியும். கொரோனா பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
தமிழகத்தில் சென்னை, மதுரை என்று உக்கிரம் காட்டிய கொரோனா தாக்கம் தற்போது ஈரோடு மாவட்டத்தை முற்றுகையிட தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில் மற்ற மாவட்டங்களை விட மிகவும் குறைவான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. ஆனால், சமீபகாலமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி 100 பேருக்கும் மேலாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,445 ஆக இருந்தது. 24 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை 895 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். 526 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,582 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். கடந்த 15-ந்தேதி இறந்த 87 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் 653 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழு நேர கொரோனா வைரஸ் சிறப்பு ஆஸ்பத்திரியாக உள்ளது. அங்கு 500 படுக்கைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக போடப்பட்டு இருந்தது.
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்து விட்டதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கும் சுமார் 200 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. எனவே இன்னும் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் போது சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தயார் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும்போது பெருந்துறையில் உள்ள திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் கூடுதலாக 1000 படுக்கைகள் வரை தயார்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தாக்கம் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. காய்ச்சல் பாதிப்பு இருந்தாலே அது கொரோனாவின் அறிகுறிதான்.
எனவே அசட்டை செய்யாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி பிரச்சினை இருந்தால் உடனடியாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க முடியும். கொரோனா பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
Next Story






