என் மலர்
செய்திகள்

கைது
அந்தியூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தவர் கைது
அந்தியூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூரை அடுத்த மாத்தூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது 12 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வீட்டின் உரிமையாளர் வரதராஜ் (வயது 58) என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜை கைது செய்தனர்.
Next Story






